கோவை சாய்பாபா காலனி ,கே. கே .புதூர், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜெகநாத ராஜன் (வயது 53) ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று அவரது வீட்டில் மாடிக்கு தண்ணீர் கேனை எடுத்துச் செல்லும் போது மாடி படியில் இருந்து தவறி கீழே விழுந்தார். ...
கோவை ரத்தினபுரி லட்சுமிபுரத்தில் இமயம் காப்பகம் என்ற பெண்கள் காப்பகம் உள்ளது.இங்கு ஏராளமான பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நேற்று இங்கு தங்கியிருந்த மதுரை சாவடியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி அபிராமி (வயது 19) காரமடை எம்.ஜி.ஆர். காலனி சேர்ந்த பிரசாந்த் மனைவி மகாலட்சுமி (வயது 22) தூத்துக்குடி பாண்டவர்மங்கலம் இ.பி. காலணியை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி சுதா ...
கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் ராமு (வயது 39) .பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.அவரது மனைவி மகாலட்சுமி ( வயது 26) இவருக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதை கணவர் ராமு கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி விஷம் குடித்தார்.மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்துக் கொண்டார்.பின்னர் ...
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 39). லேத் பட்டறை தொழிலாளி. இவர் கடந்த 5-8-2011-ம் ஆண்டு தனது சகோதரர் முரளி கிருஷ்ணன் (38). என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் வால்பாறையில் உள்ள ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டி.எண்.38. என்.3422 என்ற அரசு பேருந்து நேற்று மாலை சுமார் 6.15 மணியளவில் உருளிக்கல் அப்பர் டிவிசன் பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டி.என்.55 பிக்யூ 8988 யமஹா என்ற இருசக்கர ...
புதுடெல்லி: பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா உதவி வருவது பாராட்டுக்குரியது என்றும், உண்மையான நண்பனைப் போல் இந்தியா உதவுகிறது என்றும் இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராட் சுனெல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது: ”பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு உதவ இந்தியா முன்வந்ததை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். தேவைப்படும்போது உதவுபவரே உண்மையான ...
வாஷிங்டன்: உலகெங்கும், 76 நாடுகளைச் சேர்ந்த, 15 ஆயிரத்து 300 பேர் பங்கேற்ற உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டியில், அமெரிக்காவில் வசிக்கும் சென்னை மாணவி, நடாஷா பெரியநாயகம், 13, சிறப்பிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இளைஞர் திறன் மையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டி ...
கோவையில் காந்திபுரம் நஞ்சப்பா சாலை, 100 அடி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேம்பால தூண்களில் அரசியல் கட்சி, தனி நபர் உள்ளிட்ட பலர் எச்சரிக்கையையும் மீறி போஸ்டர்கள் ஒட்டுவதால், நகரின் தூய்மை மற்றும் அழகு கெடுவதாக பொதுமக்கள் ஆதங்கப்பட்டு வந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ...
கோவை அருகே உள்ள வேடப்பட்டி குரும்பபாளையம், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் யுவராஜ் ( வயது 34) இவர் ஆர். எஸ். புரம் .பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கம் உடையவர் . இவர்கள் கடந்த 27ஆம் தேதி ஆர் எஸ் புரம் லாலி ...
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மேற்குத் தொடர் மலைப் பகுதியான தமிழக கேரளா எல்லையில் உள்ள ஆனைகட்டி பகுதிக்கு சென்று வந்துள்ளனர். அப்பொழுது அவரது நான்கு சக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக சுமார் மூன்று அடி நீளம் கொண்ட பறக்கும் பாம்பு சிக்கிக் கொண்டது. அதனை வாகனத்தை சுத்தம் செய்யும் போது பார்த்து உள்ளார். ...













