டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவில் ஜி7 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். ஜெர்மன் ...

ஆய்வுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கவனித்தார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஷும் அவருக்குப் பின்னால் அமர்ந்து பாடத்தைக் கவனித்தனர். திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அருகில் உள்ள வகுப்பறைக்குச் சென்ற முதல்வர் மாணவர்களின் கல்வித்திறன் குறித்து ...

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக அரசுக்கு ஆலோசனை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து,தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள்,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது ...

நாட்டிலுள்ள ஒவ்வொரு தம்பதிகளும் மூன்று குழந்தைகளை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என சீன அரசு கட்டாயப்படுத்துவதால் அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சீனா தற்போது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் இளைஞர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ...

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில்,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ...

கா்நாடகத்தில் காலியாக இருந்த 4 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக மூன்று இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. மஜத தோல்வி அடைந்தது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 2-ஆவது முறையாக கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோந்தெடுக்கப்பட்டுள்ளாா். கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோந்தெடுக்கப்பட்ட பாஜகவின் நிா்மலா சீதாராமன், கே.சி.ராமமூா்த்தி, காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் ...

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து நாள்தோறும் உயிரிழப்பு ஏற்படும் நிகழ்வு நடைபெற்றுவரும் நிலையில், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் ...

சென்னை அருகே மாமல்லபுரத்தில் சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதியில் முதல் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். இந்நிலையில்,மாமல்லாபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட ...

பெங்களூர்: மெட்ரோ ரயில் சேவையை பெங்களூர் பொம்மசந்திரா முதல் தமிழகத்தின் ஓசூர் வரை 20.5 கிலோமீட்டர் தூரம் நீட்டிப்பு செய்ய கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தமிழகம்-கர்நாடகம் இடையேயான போக்குவரத்தை பொதுமக்கள் வேகமாக மேற்கொள்ள முடியும். கர்நாடக தலைநகர் பெங்களூரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் ...

தமிழ்நாட்டிற்கு தேக்கி வைக்க முடியாத உபரி நீரை கர்நாடாக அரசு வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை முறைப்படி வழங்காமல் பருவமழை பெய்து அணைகள் நிரம்பும் போது வெளியேறும் உபரிநீரை அதிகளவு ...