அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் 100 சதவீதம் ...
தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தொழில் முதலீடுகளின் தற்போதைய நிலை குறித்தும், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் ஆன் லைன் சூதாட்டத்தின் காரணமாக கடந்த 10 மாதங்களில் 25 ...
இந்த ஆண்டு அக்டோபா் மாதத்துக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டு வருகிறது என்று பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளாா். ருவாண்டா தலைநகா் கிகாலியில் காமன்வெல்த் நாடுகளின் தலைவா்கள் கூட்டம் ஜூன் 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தலைவா்களின் உயா்நிலைக் கூட்டம் ஜூன் 24, 25-ஆம் தேதிகளில் ...
புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத்பவார், பரூக் அப்துல்லா இருவரும் விலகிய நிலையில், கோபால கிருஷ்ண காந்தியும் மறுப்பு தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட மூவரும் பின்வாங்கிய நிலையில், சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதி முடிவடையும் ...
மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாகும் 10 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சிகள் தலா இரண்டு வேட்பாளர்களையும், பாஜக ஐந்து வேட்பாளர்களையும் நிறுத்தியிருந்தன. இதில் பாஜக-வால் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற சூழ்நிலையில் கூடுதலாக ஒரு வேட்பாளரை பாஜக களத்தில் இறக்கியது. பாஜக-வின் 5-வது ...
ஜூலை 1 முதல் இந்தியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பருவநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை உள்ளது. தொழிற்துறையின் அபரிமிதமான வளர்ச்சி, காடுகளை அழித்தது, நீர் நிலைகளை அழித்தது போன்றவற்றின் விளைவாக உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது.. இதன் காரணமாக விஞ்ஞானிகள் கணித்ததை விட வேகமாக பனிப்பாறைகள் உருகி ...
மத்திய அரசு முப்படைகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகபடுத்த அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் படி ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க முடியும். அதைத்தொடர்ந்து 25 சதவீதம் பேர் மட்டுமே அப்பணியில் தொடர்ந்து நீடிக்க முடியும், மேலும் ஓய்வூதியமும் கிடையாது என்ற அறிவிப்புகளால் தற்போது இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் ...
சென்னை: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்; சாதாரண செய்திகள்கூட ஊடக உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விடுவது இயற்கை. தொடர்ச்சியான பணிகள் – தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் உங்களில் ஒருவனான எனக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திலும், நாளை திருப்பத்தூர், வேலூர் ...
கர்நாடக உயர் நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் கர்நாடகாவில் மத வழிபாட்டுத் தலங்கள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் முதலான அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்பாட்டைத் தடை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபது ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி ...
சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும் எனவும், கட்சியில் அசாதாரண சூழல் நிலவுவதால் 23ம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.சென்னையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: எம்.ஜி.ஆர் காலம் முதல் கடந்தமுறை ...