மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது, சட்டப்படியும் அது முடியாது அணை கட்டி விடுவோம் என்று கூறுவது கர்நாடகாவின் அரசியல் ஸ்டன்ட் என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். சென்னை: மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அரசுமுறைப் பயணமாக டென்மார்க் சென்று திரும்பிய நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ...

சென்னை: சென்னையில் நாளை முதல் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். வடசென்னையில் 32, மத்திய சென்னை, தென்சென்னையில் தலா 25 என 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தாண்டு பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , “கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3-ம் தேதி, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கவுரவிக்க ஆணை வெளியிடப்பட்டு அதன்படி கடந்தாண்டு ...

பெங்களூருவில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் கே. சி. தியாகி ஞாயிற்றுக்கிழமை கூறினார்,.”நம்பிக்கையுடன், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு கூட்டப்படும்” ...

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு மேலே, இன்று அதிகாலை ஆளில்லா விமானம் பறந்ததாக வெளியான தகவலை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் இல்லத்தின் மீது அதிகாலை 5 மணியளவில் ஆளில்லா விமானம் காணப்பட்டதாக ...

வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் அறை வழங்க கடந்த 23ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மாவிற்கு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் , பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும். வாகனங்களில் செல்வோர் அறைகளில் தங்கும் நிலையில் ...

சென்னையில் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளளிடம் கூறியதாவது:- செவிலியர்களின் அலட்சியத்தால், ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக புகார் எழுந்துள்ளது. குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரித்தேன். ஏற்கனவே குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளன. கையில் ஊசி செலுத்தியது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். ...

பல்லாவரம்: பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 13-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 75 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம், 169 மாணவர்களுக்கு பி.ஹெச்டி. பட்டங்களை வழங்கினார். மொத்தம் 4,305 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆர்.எம்.கே. கல்விக் ...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனகசபையில் நின்று வழிபடக் கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து பதாகை வைத்திருந்தனர். இதனை அறிந்த பக்தர்கள் மற்றும் கோவில் தீட்சிதர்களின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்குப் ...

டெல்லி: ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். ஜூலை 20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. மழைக்கால கூட்டத்தொடரின் முதல் அமர்வு புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ...