இன்று மும்பையில் ‘இண்டியா’ ஆலோசனை கூட்டம்..!

எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது.

மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.

இந்நிலையில், இண்டியா கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதில் கூட்டணிக்கான இலச்சினை (லோகோ) வெளியிடப்படுகிறது. தொகுதி பங்கீடு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘தனிப்பட்ட லட்சியங்களுக்காக நான் எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கவில்லை என்றும், இதன்ஒருங்கிணைப்பாளராக வேறு யாரையாவது நியமிக்க விரும்புகிறேன்’’ என்றார்.மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவை தொகுதிகள் குறித்து ஆய்வு செய்ய 2 நாள் கூட்டத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசும் கூட்டியுள்ளது. இந்த கூட்டம் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இல்லத்தில் இன்றும் மதியம் தொடங்குகிறது. மாநிலத்தில் பல பகுதிகளில் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பான கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் பங்கேற்கின்றனர்..