கோவையில் கடந்த அக்டோபர் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உடனடியாக கோவைக்கு விரைந்து வந்தார். சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், இதில் தொடர்புடையவர்களை விரைந்து பிடிக்குமாறும், விசாரணையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் துரித விசாரணை நடத்தி, ...

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களுக்கு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 9) இரவு 8 மணி முதல் சனிக்கிழமை (டிசம்பா் ...

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கொச்சி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புனே – கன்னியாகுமரி ரயில், மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொச்சியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புணே ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பா் 9-ம் தேதி புறப்படும் புனே  – ...

கோவை: டிராக்டர் அட்டாச்மென்ட்ஸ் தயாரிப்பதில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாக கோவையில் உள்ள புல் மெஷின்ஸ் நிறுவனம் உள்ளது. இதனிடையே விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தும் நோக்கத்துடன் இந்த நிறுவனத்தார் “புல் எலக்ட்ரிக்” என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளனர். இந்நிலையில் இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக பல வகை விவசாயப் பணிகளை செயல்படுத்தும் வகையில் பேட்டரியில் இயங்கும் ...

தமிழ்நாடு சிறைகளில் ஆபத்தான கைதிகளை கண்காணிக்க, காவலர்களுக்கு பாடி வோர்ன் கேமராக்கள்(Body worn camera) வழங்கப்பட்டுள்ளன. சென்னை: தமிழ்நாடு சிறைத்துறையின்கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச்சிறைகள், 5 பெண்கள் சிறப்பு சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளிகள், தலா 3 திறந்தவெளி சிறைகள், சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன. ...

தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கடந்த அக்.6-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. ஆதார் எண்ணை இணைக்க ...

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டி உள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவையில் ‘ஸ்டார்’, தோரணங்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் ‘கேக்’ விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் ...

மெடிக்கல் ஷாப் அடித்து உடைத்து சேதம் ; கோவையில் வியாபாரிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியில் வசித்து வருபவர் நாராயணன் .இவர் அதே பகுதியில் மணி மெடிக்கல்ஸ் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கும் கட்டடத்தின் உரிமையாளருக்கும் இடையே ...

கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முத்து லட்சுமி கூறியிருப்பதாவது:- சூடோமோனாஸ் என்பது எதிர் உயிர் பாக்டீரிய வகையாகும். இது வேர்களில் வளர்ந்து மற்ற தீங்கு செய்யும் பாக்டீரிய மற்றும் பூஞ்சாணங்களை வளராமல் தடுத்து நன்மை செய்கிறது. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையில் சூடோமோனாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நெல் பயிரில் குலைநோய்,இலைக்கருகல் நோய், கேழ்வரகில் ...

கோவை: பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 14- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்இதனை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கோவையில் இருந்து அவர்களது ெசாந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து ...