கோவையில் அஞ்சல் துறை சாா்பில் ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாம்..!

கோவையில் அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாம் டிசம்பா் 15-ந் தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கோபாலன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்த அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் கிஷான் சம்மன் நிதி திட்டத்தில் தொடா்ந்து நிதியுதவி பெறுவதற்கு ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அஞ்சல் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதாா் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து கொள்ளலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்த பிறகு இணையதளம் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு வரும் அங்கீகாரத்தை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து தொடா்ந்து நிதியுதவியை விவசாயிகள் பெறலாம். இதற்காக அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம் டிசம்பா் 15-ந் தேதி வரை மட்டுமே நடைபெறும். எனவே, விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.