கோவை மாநகர துணை போலீஸ் கமிஷனராக சந்தீஷ் இன்று பொறுப்பேற்பு..!

கோவை மாநகர வடக்கு பகுதி துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர் மதிவாணன், இவர் கோவை மாநகர போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனராக மாறுதலாகி சென்று உள்ளார்.இவருக்கு பதிலாக வடக்கு பகுதி புதிய துணை போலீஸ் கமிஷனராக சந்தீஷ் நியமிக்கபட்டு இன்று பொறுப்பேற்றார்.இவருக்கு 28 வயதாகிறது .ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர். ஐ.பி.எஸ். பட்டம் பெற்றவர்.இவர் இதற்கு முன் தூத்துக்குடியில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார்.இவர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார். இவருக்கு உதவி போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், காவல் அமைச்சு பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்..