மாஸ்கோ: உக்ரைன் போரின் எதிரொலியாக தற்போது ரஷ்யாவில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.உக்ரைனை ஆக்கிரமிக்க கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய விளாடிமிர் புடின் அரசு திடீரென ரஷ்ய ராணுவத்துக்கு அதிரடித் தாக்குதலுக்கு நடத்த உத்தரவிட்டது. இதனால் நிலைகுலைந்து போன உக்ரைன் ராணுவம், ரஷ்ய ராணுவத்துடன் கடும் மோதலில் ஈடுபட்டது.லட்சக்கணக்கான உக்ரைன் குடிமக்கள் இதனால் அண்டை நாடுகளான பெலாரஸ், ...

மத்திய தொழிலாளர்துறையின் சார்பாக 7 நாட்கள் இலவச மருத்துவம் முகாம் நடைபெற இருப்பதால், இது தொடர்பாக தமிழகம் மண்டல துணை தலைமை தொழிலாளர் கமிஷனர் அருண்குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மண்டல தொழிலாளர் அமைப்பு சார்பாக மார்ச் 7 (இன்று) 13ஆம் தேதி வரை ...

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 14,250 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு இதனை தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு 55 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்திருப்பதாக கூறிய அவர், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக இயக்குதல், சீட் பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிய ...

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகத் தமிழ்நாட்டில் காவல் புகார் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சுதந்திரமான நபரை நியமிக்கும் வகையில் இது சம்பந்தமான திருத்தம் செய்வது குறித்து ஒரு வாரத்தில் விளக்கமளிக்கத் தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் வழங்கியுள்ளது. சென்னை: காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராகப் புகார்களைக் கொடுக்க அனைத்து ...

தமிழகம் முழுவதும் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்ககூடாது என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் வனப்பகுதிகளுக்குள் கால்நடைகள் கொண்டு செல்வதால் விலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடுவதாகவும், ...

உலக காது கேட்கும் நாள் ஆண்டுதோறும் மார்ச் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ‘வாழ்நாள் முழுவதும் கேட்க கவனமுடன் கேளுங்கள்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடத்தப்படுகிறது. கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், காது கேட்கும் திறன் குறைபாடுடன் வரும் நோயாளிகளுக்கு, முறையான பரிசோதனையுடன், தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. மேலும், கேட்கும் ...

சார்பதிவாளர் அலுவலகங்களில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமான ரூ.200 மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; சார்பதிவாளர் அலுவலகங்களில், மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால் ஆவணங்கள் பதிவு அதிகமாக இருக்கும். கடன்பெற்று வீடு மற்றும் மனை வாங்குபவர்கள் மார்ச் மாதத்திற்குள் ஆவணப்பதிவினை முடிக்க ...

சோமனுார் : கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி, 52 நாட்களாக நடந்து வந்த விசைத்தறி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்றிலிருந்து விசைத்தறிகள் மீண்டும் இயங்கத் தொடங்கின. கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டு கமிட்டி சார்பில், புதிய கூலி உயர்வை அமல்படுத்தக் கோரி, கடந்த, ஜன., 9ம் தேதி ...

சென்னை: டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்பதற்கான சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கக்கூடிய வகையிலேயே அதன் சட்டவிதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்திருக்கிறது. மக்கள் தெரிவிக்கும் ஆட்சேபங்களை பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பிக்காமல் எந்த ...

இணையதளம் மூலமாக பணமோசடி செய்தவர்களிடமிருந்து காவல்துறையினரால் 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ராமகிருஷ்ண பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கைபேசிக்கு முகம் தெரியாத நபரின் போன் கால் ஒன்று வந்துள்ளது. அந்த நபர் ராமகிருஷ்ண பிரபுவிடம் அதிக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை ...