கோவை வழக்கறிஞர் சங்க தேர்தல் வரும் 31-ந் தேதி நடைபெறும்.!!

கோவை வக்கீல்கள் சங்க தலைவர் அருள்மொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது .அதில் செயற்குழுவின் பதவி காலத்தை ஒரு ஆண்டு என ஏற்கனவே உள்ள விதிமுறையை தொடர்வது என்றும் ‘ஆனால் தேர்தலை நிதி ஆண்டுக்கு ஏற்ப ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஒரு ஆண்டு காலம் என மாற்றி அமைத்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே வக்கீல்கள் சங்கத் தேர்தல் இந்த மாதம் 31ம் தேதி நடைபெறும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.