மேம்பாலத்தில் 4 – வது விபத்து – தொடரும் விபத்துக்களால் மக்கள் அச்சம். கோவை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் நான்காவது விபத்து ஏற்பட்டுள்ளது கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோவை – திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் தொடர்ந்து விபத்துக்கள்நடைபெற்று வருகிறது.ஏற்கனவே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேல் இருந்து கீழே ...

சைட் லாக்கை உடைத்து இருசக்கர வாகனங்களை திருடும் ஃபுரபசனல் திருடர்கள்.. வாகன திருட்டு பீதியில் உறங்காமல் தவிக்கும் வாகன உரிமையாளர்கள்.. நள்ளிரவில் இருசக்கர வாகனங்களை திருடும் கும்பல்களின் கொட்டங்களை அடக்குமா – இரவு நேர காவல்துறையின் ரோந்து பணி கோவையில் நள்ளிரவில் வாகனம் திருடும் திருடர்கள் அதிகரித்துள்ளனர். காவல்துறையினருக்கு வருகின்ற புகாரில் வாகன திருட்டு புகார் ...

  கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லெட் விற்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது.  கஞ்சா கடத்தல் அதிகரிப்பு கோவை நகரில் ஏராளமான கல்லூரிகள் உள்ளதால் மாணவர்கள் மற்றும் வாலிபர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா கடத்தல் ஆசாமிகளை கைது செய்தாலும், முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. ...

கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் தனியார் மது பார் உள்ளது. இதன் உரிமையாளர் பிரபாகரன். நேற்று இரவு இந்த பாரில் சூரிய பிரகாஷ் உள்பட சிலர் மதுகுடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது சூரியபிரகாஷ் உள்பட சிலர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனர். பார் உரிமையாளர் பிரபாகரன் அவர்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தியால் பிரபாகரனை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேதுபதி நகரை சேர்ந்தவர் நவீன் (வயது 28). இவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- நான் ஏ.சி. விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறேன். திருமணம் செய்வதற்காக திருமணம் தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்து ...

கோவை தடாகம் 24 வீரப்பாண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). தொழிலாளி. இவரது மகன் செந்தில்குமார் (37). வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று ஆறுமுகம் வீட்டில் இருந்தார். அப்போது செந்தில்குமார் அங்கு வந்தார். அவர் ஆறுமுகத்திடம் மது மற்றும் பீடி வாங்க என்னிடம் பணம் ...

ஆனைமலை பொன்னாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 37). இவர் கோட்டூர் அடுத்த எஸ். பொன்னாபுரத்தில் உள்ள மதுைர வீரன் கோவிலில் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று இரவு காளிமுத்து வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி வீட்டுக்கு சென்றார். அப்போது கோவில் வழியாக குமார் என்பவர் நடந்த சென்றார். அவர் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு ...

கோவை: மதுக்கரை வட்டம் ஒத்தகால்மண்டபம் வருவாய் ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் அதிகாரிகள் மதுக்கரை நாச்சிப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 யூனிட் மணல் அனுமதி இல்லாமல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் மதுக்கரை போலீசாருக்கு தகவல் ...

சின்னசேலம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த வழக்கில் சிபிசிஐடி எஸ்பி ஜியாவுல் ஹக் தலைமையிலான விசாரணைக் குழுவினர் இன்று தங்கள் விசாரணையை தொடங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். ...

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா உள்பட 12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் ...