நடத்தையில் சந்தேகம்: பெண் செவிலியரை கத்திக் குத்திய கணவன் – பட்டப் பகலில் கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!! கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த நான்சி என்ற பெண் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்தாண்டுகளாக செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நான்சி நடத்தையில் கணவர் ...

கோவை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலா் மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பீளமேடு, போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை, புறநகர் போலீசார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், ...

கோவை கிணத்துக்கடவை அடுத்த சொக்கனூரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 69). இவரது மகன் கார்த்திகேயன் (30). இவருக்கும் ஜீவிதா (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி பிரிந்தனர். ஜீவிதா அவரது ...

கோவை: பெங்களூர் மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டை சேர்ந்தவர் ஷாகன்லால் சாத்ரி (வயது 60). நகை மொத்த வியாபாரி. இவர் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக தங்க நகை ஆபரணங்களை தயாரித்து தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகிறார். கோவையில் உள்ள பல நகைக்கடைகளுக்கு அவரது கடையில் இருந்து ...

கோவையில் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் கடைகள் சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன தொடர்ந்து குனியமுத்தூர் மற்றும் டவுன்ஹால் பகுதியில் அரசு பஸ் கண்ணாடி கல் வீசி உடைக்கப்பட்டன. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்கள் மக்களிடையே பரபரப்பை ...

இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா பகுதியில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கலவரத்தில் 127 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அரேமா எஃப்சிக்கும் பெர்செபயா சுரபயாவுக்கும் இடையிலான கால்பந்து போட்டி கஞ்சுருஹான் ஸ்டேடியத்தில்  நடைபெற்றது. அப்போது பெர்செபயா சுரபயா அணியிடம் அரேமா எஃப்சி 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் அரேமா எஃப்சி ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து ...

ஓடும் பேருந்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்…போலீஸ் எனக்கூறி மிரட்டிய ஆசாமியை தேடும் போலீஸ். பேருந்தில் பயணித்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவரின் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், தன்னை போலீஸ் எனக்கூறிய நிலையில் அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தில் ஒரு தம்பதி பயணம் செய்தனர். அவர்களின் பின் ...

கோவை குனியமுத்தூரில் முன்பகை காரணமாக டிரைவர் உட்பட 3 பேருக்கு கத்திக் குத்து கோவை சுண்டாக்காமுத்தூரை சேர்ந்தவர் சசி (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவரை மிரட்டி குனியமுத்தூரை சேர்ந்த பூவேந்திரன் என்பவர் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்ததாக தெரிகிறது. மேலும், திருடிய பொருட்களை திரும்ப ஒப்படைப்பதற்கு ரூ. 10 ஆயிரம் ...

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பேக்கரி சங்க நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ...

கோவை மாவட்டம் கே.ஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் வாகன தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை சோதனை செய்ததில், அவர்கள் உயர் ரக போதைப் பொருளான “Methamphedamine” ஐ ...