நாயை நடுரோட்டில் கொடூரமாக அடித்துக் கொன்ற வாலிபர் மீது மிருகவதை சட்டம் பாய்ந்தது ..!

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையம் சின்னண்ண செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ஜெயராம் .இவரது மகன் கிருஷ்ணன் என்ற அதிரச கார்த்திக் ( வயது 27) இவர் நேற்று அந்த பகுதியில் ஒரு வீட்டின் முன் படுத்திருந்த நாயை கொடூரமாக அடித்துக் கொன்றார். இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது.மிருகவதை தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு இவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இவர் ஜாமினில் விடுவிக்கபட்டார்.