மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் போக்சோவில் கைது..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார் ( வயது 22 )அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார் .இவருக்கும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் பல இடங்களுக்கு சென்று வந்தனர் .அப்போது அவர் அந்த மாணவியுடன் செல்பி எடுத்துக் கொண்டார் .இதையடுத்து அவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்று உள்ளார். இதை அந்த மனைவி கண்டித்து உள்ளார். இந்த நிலையில் பாட்டி வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவிக்கு மோகன் குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவி பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்குமாரை நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.