மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண் கற்பழிப்பு – டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவை வெள்ளலூர் ரோட்டில் உள்ள மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் வரதராஜ் ( வயது 43) திருமணம் ஆகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான். மனைவி தற்போது கர்ப்பமாகி பிரசவத்துக்காக புதுக்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.இந்த நிலையில் வரதராஜ் அதே பகுதியில் வசிக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.இது குறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா ,சப் இன்ஸ்பெக்டர் வித்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து டிரைவர் வரதராஜை கைது செய்தனர். இவர் மீது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..