கோவை மத்திய சிறை வாசலில் தாரை தப்பட்டை அடித்து வரவேற்பு கொடுத்த பா.ஜ.க.வினர் மீது வழக்குபதிவு ..!

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஒரு வழக்கு தொடர்பாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் .அவர் சிறையில் இருந்து நேற்று ஜாமினில் வரும்போது சிறை வாசல் முன் பா.ஜ.க.வினர் தாரை தப்பட்ட முழங்க வரவேற்பு கொடுத்தனர்.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது.அனுமதி இல்லாமல் சிறை வாசல் முன் கூடி ,தாரை தப்பட்டை அடித்து வரவேற்பு கொடுத்ததற்கான பாலாஜி உத்தம ராமசாமி உட்பட 6 பாஜ.கவினர் மீது 2பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.