கோவை தொழிலதிபர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு – வேலைக்கார பெண் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்..!

கோவை காளப்பட்டி அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர்’ கிருஷ்ண சந்தர்,இவரது மனைவி தேவி பிரியா ( வயது 38)சொந்தமாக தொழில் செய்து வருகிறார்கள்.இவர் தான் அணியும் நகைகளை வழக்கமாக பீரோவில் வைப்பார்.இந்த நிலையில் 6 -ந்தேதி பீரோவில் கழட்டி வைத்த 20 பவுன் நகைகளை காணவில்லை.வீட்டில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பீளமேடு போலீசில் தேவி பிரியா புகார் செய்துள்ளார் .புகாரில் தனது வீட்டில் வேலை செய்து வரும் சோனா என்ற பெண் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.