கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வேலாண்டிபாளையம் மருத கோனார் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் பணம் வைத்து சீட்டாடுவதாக சாய்பாபா காலனி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தமிழரசு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடியதாக அதே பகுதியை சேர்ந்த ஜோசப் ( 51) வீரைய்யா (34) ...

கோவை : சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சிங் (வயது 25)இவர் சூலூரில் தங்கி இருந்து சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று இவர் ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது 4 பேர் இவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டனர். அவர் கொடுக்க ...

கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 29 வயதான தேங்காய் வியாபாரி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் அந்த வியாபரிக்கும் அவரது மனைவியின் தங்கையான 25 வயது திருமணமாகாத இளம் பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது .இதனால் அவர்கள் ...

கோவை சிங்காநல்லூர் , நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( வயது 34 ,இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து அதிக பணம் ஈட்டலாம். விருப்பம் இருந்தால் இந்த எண்ணை கிளிக் செய்யவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி அவர் வங்கி மூலம் ரூ 6 லட்சத்து59 ஆயிரம் ...

கோவை பெரியகடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக  பணிபுரிந்து வருபவர் மஞ்சுளா .இவர் நேற்று தெற்கு உக்கடம் ,அற்புதம் நகரில் சந்தேகத்திற்கிடமானவர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் (வயது 47) என்பவர் சப் இன்ஸ்பெக்டர் மஞ்சுளாவிடம் தகராறு செய்தாராம். இதுகுறித்து பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது ...

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மீது ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஏற்கனவே அடிதடி கஞ்சா விற்பனை உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் ஜீவானந்தம் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். ...

புதுடெல்லி: ‘ஊழல்வாதிகள் தான் இந்த நாட்டை அழிப்பவர்கள். ஊழல் செய்து விட்டு பண பலத்தால் தப்பி ஓடிவிடுகின்றனர்,’ என எல்கர்-பரிஷத் வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக ஆவேசமடைந்தனர். மகாராஷ்டிராவின் பீமா கொரேகானில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த எல்கர் பரிஷத் நிகழ்வில் கடும் வன்முறை வெடித்தது. இந்த வழக்கில் சமூக செயற்பாட்டாளர் கவுதம் ...

கனடா: சீனா ஜனநாயக நாடுகளுடன் ஆக்கிரமிப்பு விளையாட்டுகளை விளையாடுவதாகவும் கனேடிய நிறுவனங்களை குறிவைப்பதாகவும் ட்ரூடோ குற்றம் சாட்டினார். கனேடிய உளவுத்துறை, சமீபத்திய தேர்தல்களில் சீனா ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பை அடையாளம் கண்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை வந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஃபெடரல் தேர்தலில் சீனாவால் குறைந்தது 11 வேட்பாளர்கள் ஆதரித்ததாக அதிகாரிகள் ட்ரூடோவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ...

சென்னை : ‘மாரியம்மன் இண்டியன் பேங்க்’ போல தமிழகத்தின் பல இடங்களில் போலியான பெயரில் வங்கி கிளைகள் நடத்தி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கி அனுமதி பெற்றதாக் போலி ஆவணம் தயாரித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு மோசடி செய்து வந்த சென்னையைச் சேர்ந்த ...

அரசு பேருந்தில் பயணிகளை தரக் குறைவாக பேசும் ஓட்டுநர், நடத்துனர்: கோவையில் பெண்களுக்கு நடக்கும் அவலம்… கோவையில் சமீப காலமாக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனார்கள் பயணிகளை ஆபாசமாகவும் மிகவும் கீழ்த் தரமாகவும் பேசி வருவது மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது . இன்று பெண் ஒருவர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று ...