குற்றவாளி  இரண்டு பேர் பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்…

குற்றவாளி  இரண்டு பேர் பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (41) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  மேலும் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சிவராமன் (22) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கண்ட இரண்டு நபர்களின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்,, மேற்கண்ட இரண்டு நபர்களின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் படி போக்சோ வழக்கு குற்றவாளியான பரமேஸ்வரன் (41) மற்றும் தொடர் கஞ்சா வழக்கு குற்றவாளியான சிவராமன் (22) ஆகிய இரண்டு நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார். இதுவரை கோவை மாவட்டத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்ட 30 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்திலும், 2 நபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்(NSA) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.