கோவை சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று நீலிகோணாம்பாளையம் அருகே பஸ் நிறுத்தத்தில் சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சுதாகரனிடம் பணம் கேட்டு மிரட்டினார். பின்னர் திடீரென அவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.350-யை பறித்து கொண்டு தப்பினார். ...

கோவை துடியலூர் ஜி.என்.மில் பக்கம் உள்ள டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் நடராஜ் .இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 56) இவர் நேற்று தனியார் டவுன் பஸ்சில் பூ மார்க்கெட் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார் .அங்கு பஸ்ஸை விட்டு இறங்கும் போது இவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை காணவில்லை. யாரோ பஸ்சில் வைத்து திருடிவிட்டனர். ...

கோவை சிட்கோ பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 22). இறைச்சி கடை ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது உறவினர் ஒருவரின் 16 வயது மகன் பீடி புகைத்து கொண்டிருந்தார். இதனை ஆறுமுகம் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டருகே நின்று இருந்தார். அப்போது அங்கு ...

கோவை நியூசித்தாபுதூர் சின்னசாமி நாயுடு வீதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக நான் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். கடந்த 2017-ம் ஆண்டு கோவையை சேர்ந்த கோபி (32) ...

கோவை கள்ளிப்பாளையததை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). கூலி தொழிலாளி. இவரது நண்பர்கள் ஆலாந்துறையை சேர்ந்த மனோஜ், சதிஷ், சபரி. சம்பவத்தன்று நண்பர்கள் 4 பேரும் ஆலாந்துறையில் உள்ள நண்பரின் திருமணத்துக்கு சென்றனர். அங்கு பிரசாந்த், மனோஜ், சதிஷ், சபரி ஆகியோர் மது குடித்தனர். மது தீர்ந்ததால் மீண்டும் மது வாங்க ஆலாந்துறை டாஸ்மாக் கடைக்கு ...

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக புகார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதன்படி, பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி ...

மனைவியை உடலுறவுக்கு அழைத்ததை தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல்.பக்கத்து வீட்டுக்காரர் கைது. கோவை :  கோவை மதுக்கரை பக்கமுள்ள நாச்சிபாளையம் ,தக்காளி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 32 )இவர் தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிஷா( வயது 29) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ...

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகைகளின் பங்குகளை மாற்றியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பியிடம் மீண்டும் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தியை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று 2-வது நாளாக நாடு முழுவதும் ...

கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு அக் கல்லூரியின் சேர்மன் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி என்ற பெயரில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் சேர்மனான டாஸ்வின் அதே ...

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து நாள்தோறும் உயிரிழப்பு ஏற்படும் நிகழ்வு நடைபெற்றுவரும் நிலையில், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் ...