ஃபைன் பியூச்சர் நிறுவன வாகனங்கள் ஏலம்..!!

மோசடி வழக்கில் பைன் பியூச்சர் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கான ஏலம் ஏப்ரல் 28 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள எட்டு வாகனங்களை ஏலத்தில் விடுவது தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த வாரத்தில் நடைபெற்ற ஏலத்தில் பைன் டீச்சர் நிறுவன உரிமையாளர்கள் இடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒன்பது கார்கள் ஏலம் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அப்பொழுது ஒரு கார் மட்டும் ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதை அடுத்து மற்ற வாகனங்களில் ஏலம் வருகின்ற 28 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றம் அறிவித்து உள்ளது.