சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்: 6 பேர் கைது- ரூ 90 ஆயிரம் பணம், பைக் பறிமுதல்..!

கோவை பேரூர் அருகே உள்ள செல்லப்பகவுண்டன் புதூரில்ஒரு தோட்டத்துக்கு அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியது தெரிய வந்தது. இது தொடர்பாக செல்ல கவுண்டன் புதூரை சேர்ந்த பிரதீப் குமார் (வயது 37) மத்வராயபுரம் விஜி (வயது 26) நாதே கவுண்டன் புதூர் விஜயகுமார் ( வயது 39) பி. கே. புதூர். செந்தில்குமார் ( வயது 50)மத்துவராயபுரம் பிரவீன குமார் (வயது 30 )ஸ்ரீதர் (வயது 28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் . சூதாட பயன்படுத்தபட்ட ரூ 90 ஆயிரத்து 790 பணமும், 4 சேவல்களும், 4 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது..