கோவை வங்கி பெண் அதிகாரியை காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் – சமையல் கலை வல்லுனர் மீது புகார்..!

கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார் .இந்த நிலையில் இவர் கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். இந்த நிலையில் என் பெற்றோர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த 28 வயது நபருடன் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவர் மாலத்தீவில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல்கலை நிபுணராக பணிபுரிகிறார். இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி அவர் என்னை ஆனைகட்டிக்கு வரும்படி அழைத்தார். இதையடுத்து நாங்கள் இருவரும் ஆனைகட்டிக்கு சென்றோம் .அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினோம் .அப்போது அவர் மது குடித்தார். என்னையும் மது குடிக்கும்படி கட்டாயபடுத்தினார் .ஆனால் நான் அதற்கு மறுத்து விட்டேன். இதன் பின்னர் நாங்கள் காரில் வீட்டிற்கு புறப்பட்டு வந்தோம். ஆனால் வீட்டிற்கு வரும் வழியில் அவர் என்னை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.இதன் பின்னர் அவர் மாலத்தீவு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து நாங்கள் தற்போது பேசி வந்தோம். இதற்கு இடையே நான் கர்ப்பமானேன். இதுகுறித்து அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். ஆனால் அவர் திருமணத்திற்கு முன் கர்ப்பம் வேண்டாம். பப்பாளி , அன்னாசி, பழங்களை சாப்பிட்டு கருவை கலைத்துவிடு என்று கூறினார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த நிலையில் ரூ. 5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தால் தான் திருமணம் செய்வேன் என்றும் கூறினார். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக உள்ளனர். எனவே என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததுடன் திருமணத்திற்கு மறுத்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் கோவை மேற்குபகுதி அனைத்து மகளீர் போலீசார் வழக்குபதிவ செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..