காருடன் தீயில் கருகி தொழில் அதிபர் மரணம்..

கோவை : கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சுபாஷ் ( வயது 50) தொழில் அதிபர். இவர் கோவை சரவணம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று சுபாஷ் தனது காரை எடுத்துக் கொண்டு பெரியநாயக்கன்பாளையம் அருகே கே.பி. கார்டன் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தை பார்வையிட சென்றார். இந்த நிலையில் அவர் அந்த பகுதியில் காரில் உள்ள இருக்கையில் அமர்ந்தவாறு தீயில் கருகி இறந்து கிடந்தார். காரும் தீயில் எரிந்து சேதமடைந்தது .இவர் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வெயில் மற்றும் மின் கசிவு காரணமாக கார் தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தாரா?என்பது தெரியவில்லை. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.