பெட்டிக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு – வாலிபர் கைது.!!

கோவை விளாங்குறிச்சி ரோடு, வினோபாஜி நகரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே பெட்டி கடைநடத்தி வருபவர் கிரேடன் பெர்னாண்டஸ் (வயது 42) நேற்று இரவு 3 வாலிபர்கள் இவரது பெட்டி கடைக்கு வந்து சிகரெட் கேட்டனர். கடையில் இருந்த அவரது மனைவி சிகரெட் இல்லை என்று கூறினார். இதனால் அவரிடம் தகராறு செய்தனர் . பின்னர் அங்கிருந்து சென்ற வாலிபர்கள் மீண்டும் அந்த பெட்டி கடைக்கு வந்து பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இதனால் பெட்டி கடையின் ஒரு பகுதி எரிந்து சேதமடைந்தது. அருகிலுள்ள ஓட்டலும் சேதமடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பீளமேடு வினோபாஜி நகரை சேர்ந்த வரதராஜன் ( வயது 25) என்பவர் பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டு தகராறு செய்து கூட்டாளிகள் பால்ராஜ், அறிவழகன் ஆகியோருடன் வந்து பெட்ரோல் குண்டு வீசி உள்ளார் என்பது தெரிய வந்தது.ன் இதில் உணவகத்திலும் லேசான தீ விபத்து ஏற்பட்டது . அது உடனடியாக அணைக்கப்பட்டது. இது தொடர்பாக வரதராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் பால்ராஜ், அறிவழகன் ஆகியோரை தேடி வருகிறார்கள்..