அணையில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி..

கோவை கவுண்டம்பாளையம், அசோக் நகர், யூனியன் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் லக்ஷித் (வயது 16) அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் . இவரது மகன் சரவணன் (வயது 17) இவர்கள் இருவரும் தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்து வருகிறார்கள். நேற்று விடுமுறை என்பதால்  7 நண்பர்களுடன் ஈஷா யோகா மையத்துக்கு சென்றனர் . பின்னர் அங்கிருந்து வீடு திரும்பும் வழியில் நரசிபுரம் – ஈசா ரோடு, புதுக்காட்டு வாய்க்கால் அணைக்கட்டு பகுதிக்கு குளிக்க சென்றனர். ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். அப்போது லட்சித் , சரவணன் ஆகியோர் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்து, மூழ்கி இறந்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று நீரில் மூழ்கிய லக்சித் ,சரவணன் ஆகியோரது பிணங்களை மீட்டு பிரேத பரிசோதிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.