வாகன சோதனையில் ஈடுபட்ட கோவை சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்..

கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் சுப்பிரமணியம் ( வயது 55)இவர் நேற்று இரவு 11- 45மணிக்கு புலியகுளம் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார்.இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கடத்தூர் இவருக்கு அல்லிராணி என்ற மனைவியும்,விக்ரமன் என்ற மகனும் விவேகா என்ற மகளும் உள்ளனர்.இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.இவர் பாப்பநாயக்கன்பாளையம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.