லாரியில் செங்கல்கள் எடுத்து செல்லக் கூடாது – தடாகம் காவல் நிலையம் எச்சரிக்கை..!

கோவை மாவட்டம் துடியலூர் பக்கம் உள்ள தடாகம் காவல் நிலையம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் மற்றும் பன்னிமடை கிராமங்களில் இயங்கும் செங்கல் காளவாய்களில் இருந்து செங்கல் எடுத்து செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் முறையான உத்தரவு இன்னும் பிறப்பிக்கபடவில்லை. இதனால் செங்கல்களை எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றமாகும். எவரேனும் செங்கல்களை சட்ட விரோதமாக எடுத்துச் செல்லும் பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு செங்கல்களும், லாரியும் பறிமுதல் செய்யப்படும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.