கோவை அருகே காருடன் 500 கிலோ குட்கா பறிமுதல்..வடமாநில வாலிபர் 2 பேர் கைது…

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ளபிருந்தாவன் பள்ளிக்கூடம் அருகேசெட்டிபாளையம்போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது அந்த வழியாக வந்த 2 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 500 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் ( வயது 38) அல்வீர் சிங் (வயது 24) ஆகியோர்கைது செய்யப்பட்டனர்.இவர்களில் முகேஷ் தற்போது ஒப்பணக்கார வீதியிலும், அல்வீர் சிங் செல்வபுரத்திலும் வசித்து வருகிறார்கள்.இவர்கள் குட்காவைவடமாநிலத்தில் இருந்து கடத்தி வந்து செட்டிபாளையம், மதுக்கரை, பேரூர் பகுதிக்கு விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரியவந்தது.