கோவை பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.!!

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தில் பி .எஸ் . பி . பி .மில்லேனியம் என்ற தனியார் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2,600-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தப் பள்ளிக்கு நேற்று காலை 11 – 30 மணிக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது .

இதையடுத்து முதல்வர் சுவர்ண லட்சுமி வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.. இ -மெயில் அனுப்பியவர் யார்? எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி அறிந்ததும் மாணவ – மாணவிகளை பெற்றோர்கள் விரைந்து வந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் .பின்னர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள் அங்கு “மெட்டல் டிடெக்டர் ” கருவி மூலம் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினார்கள். மதியம் 12:00 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.