தோட்டத்தில் புகுந்து வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்.!!

கோவை ஆலாந்துறை அருகே உள்ள இருட்டு பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்தது .அங்கிருந்த ஏராளமான வாழைகளை நாசமாக்கியது. மேலும் ஏராளமான தென்னை மரங்களையும் கீழே சாய்த்தது. 6 மணி நேரம் அங்கே முகாமிட்டிருந்த காட்டு யானைகள் தோட்டம் முழுவதையும் அளித்தது .நேற்று அதிகாலையில் அந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்கு மீண்டும் சென்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினரிடம் புகார் செய்துள்ளனர்.