50 பவுன் நகை கேட்டு மனைவிக்கு மிரட்டல் – கணவர் மீது போலீசில் புகார்.!!

கோவை சுந்தராபுரம், சாரதா மில் ரோட்டில் உள்ள செங்கோட்டையா காலனியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் டேவிட் காக்ஸ் (வயது 48) இவரது மனைவி மெர்சி லீலா (வயது 44) இந்த நிலையில் கணவர் லாரன்ஸ் டேவிட் காக்சுக்கு சோபியா என்ற பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது..இதை மெர்சீலீலா கண்டித்தார்..இதனால் ஆத்திரமடைந்த லாரன்ஸ் டேவிட் மெர்சி லீலாவை தாக்கினார் .இதை யடுத்து கடந்த 20 20 ஆம் ஆண்டு லாரன்ஸ் டேவிட் காக்ஸ், செட்டிபாளையம் வடிவு நகரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் செட்டிபாளையம் வடிவு நகரில் கணவர் தங்கி இருக்கும் வீட்டுக்கு .மெர்சி லீலா சென்றார் . அங்கு சோபியாவும் தங்கி இருந்தார் . இது பற்றி கேட்ட போது 50 பவுன் நகையும் ,பணமும் கொடுத்தால் தான் உன்னிடம் வாழ்க்கை நடத்துவேன் என்று கூறினாராம். இது குறித்து மெர்சி லீலா சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோமதி வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து லாரன்ஸ் டேவிட் காக்சை தேடி வருகிறார்.