கோவை குளத்தில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு ..

கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் யார்? எந்த ஊர் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. மேலும் அவர் குளத்தில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.