தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக ...

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். ‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’இது தான் விஜயகாந்தின் இயற்பெயர். 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி மதுரை திருமங்கலத்தில் கே.என்.அழகர்சாமி நாயுடு, ஆண்டாள் அழகர்சாமி தம்பதிக்கு மகனாக பிறந்தார். நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர், ...

சென்னை எண்ணூர் அருகே உள்ள பெரிய குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட அம்மோனியா திரவ வாயு கசிவு காரணமாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு வாந்தி, மயக்கம், கண்ணெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டதால் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக ...

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய ...

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் திரு.குணேஸ்வரன், உதகை படகு இல்ல மேலாளர் திரு.சாம்சன் கனகராஜ் உட்பட பலர் உள்ளனர் ...

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் கோயில் அர்ச்சகர்களுக்கான ஊதியத்தை ரேசன் போல அளந்து கொடுப்பதாக தமிழ்நாடு அரசை விமரிசித்துள்ளார், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து கோயில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்த ...

புதுடெல்லி: மது மற்றும் போதை பொருட்கள் பழக்கத்துக்கு எதிராக மிகப்பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். தேசிய வீர பாலகர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள பாரத்மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங்கின் இளையமகன்கள் ...

கோவை காந்தி பார்க், தெலுங்கு வீதியைச் சேர்ந்தவர் கவுதம் ( வயது 33)ஆர் .எஸ். புரம்ராமலிங்கம் ரோட்டில் நகை கடையும், பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுராஜ் என்பவர் தொழிலாளியாகவேலை பார்த்துவந்தார்.அவரிடம் கவுதம் 180.560 கிராம் தங்கத்தை கொடுத்து வளையம் செய்யுமாறு கூறினார்.அந்த தங்கத்துடன் சுராஜ் எங்கோ மாயமாகிவிட்டார்.இதுகுறித்து கவுதம் ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளியூரில் இருந்து வரும் பயணிகளிடம் கஞ்சா கொண்டு வருவதாக தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டிருந்தார் அதன் பேரில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 வது பிளாட்பார்மில் விஜயவாடாவில் இருந்து 12 கிலோ கஞ்சாவை பிரகாஷ் ...

அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் வயது 35 இவரது மனைவி ஹேமாமாலினி வயது 29 இவர்கள் இருவரும் உறவினர்களை பார்த்து விட்டு அரக்கோணம் ரயிலில் ஏறி வந்தனர் புளியமங்கலம் ரயில் நிலையத்தில் வண்டி நின்றதும் கொள்ளையன் ஒருவன் ஹேமமாலினி கழுத்தில் கிடந்த ஆறு சவரன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடினான் ...