அரக்கோணம் அருகே ரயில் கொள்ளையனை பிடிக்க ஓடும் ரயிலில் குதித்த கணவன் மனைவி…

அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் வயது 35 இவரது மனைவி ஹேமாமாலினி வயது 29 இவர்கள் இருவரும் உறவினர்களை பார்த்து விட்டு அரக்கோணம் ரயிலில் ஏறி வந்தனர் புளியமங்கலம் ரயில் நிலையத்தில் வண்டி நின்றதும் கொள்ளையன் ஒருவன் ஹேமமாலினி கழுத்தில் கிடந்த ஆறு சவரன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடினான் இதைப் பார்த்து வினோத் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தார் இதைக் கண்ட அவரது மனைவி ஹேமமாலினி அவரும் ஓடும் ரயிலில் இருந்து குதித்தார் இருவருக்கும் காயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர் இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து பிளாட்பார்மில் கிடந்த அறுபட்ட துண்டு செய்னையும் மொபைல் போனையும் இருந்ததை கண்டுபிடித்து ஹேமமாலினி கையில் கொடுத்தனர்