சென்ட்ரலில் சிக்கிய கஞ்சா: 2 பேர் கைது…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளியூரில் இருந்து வரும் பயணிகளிடம் கஞ்சா கொண்டு வருவதாக தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டிருந்தார் அதன் பேரில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 வது பிளாட்பார்மில் விஜயவாடாவில் இருந்து 12 கிலோ கஞ்சாவை பிரகாஷ் வயது 32 தகப்பனார் பெயர் முருகன் ஐந்தாவது பிளாட் ஆபிசர் டவுன் ஆனையூர் மதுரை என்பவனை சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி காவலர்கள் வெங்கடேசன் விக்னேஷ் ஆகியோர் மடக்கி பிடித்து கைது செய்தனர் இதேபோல் நேற்று அதிகாலை 3.20 மணிக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக வந்தவனை பிடித்து சோதனை இடுகையில் அவனிடத்தில் 4 1/2 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து கைது செய்தனர் அவ னது பெயர் விவரம் வருமாறு பிரசாந்த் வயது 20 தகப்பனார் பெயர் சீனிவாசன் இரும்பு கடை வீதி சந்தப்பேட்டை பழைய காந்தி நகர் சேலம் மேலே குறிப்பிட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்