நகை பட்டறையில் தங்கம் மோசடி. தொழிலாளிக்கு வலை…

கோவை காந்தி பார்க், தெலுங்கு வீதியைச் சேர்ந்தவர் கவுதம் ( வயது 33)ஆர் .எஸ். புரம்ராமலிங்கம் ரோட்டில் நகை கடையும், பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுராஜ் என்பவர் தொழிலாளியாகவேலை பார்த்துவந்தார்.அவரிடம் கவுதம் 180.560 கிராம் தங்கத்தை கொடுத்து வளையம் செய்யுமாறு கூறினார்.அந்த தங்கத்துடன் சுராஜ் எங்கோ மாயமாகிவிட்டார்.இதுகுறித்து கவுதம் ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை தொழிலாளியை தேடி வருகிறார்கள்.