கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, கண்ணூர், மலப்புரம், வயநாடு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.இந்த பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன. வெள்ளம் பாதித்த பகுதி களில் படகுகள் மூலம் மீட் புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் ...

தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளை அனுமதிப்பது குறித்து விரிவான கொள்கை முடிவு எடுக்கும் வரை பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், விதிகளை மீறினால் அபராதம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது.மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். நவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல ...

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் உச்சநீதிமன்றம் தடை மறுத்த நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு முழு மரியாதை செலுத்துவதும், பக்தர்களின் மத உணர்வுகளையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வழிபாட்டு உரிமைகளையும் மதிப்பதும் அரசின் கடமை என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கோரிக்கை ...

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழக வெற்றிக் கழகம் தனது ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியை விரிவுபடுத்தியுள்ளது.இதற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சித் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த வைகைச்செல்வன், கலைராஜன், புகழேந்தி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களுக்கு முக்கியப் ...

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீலா என்பவர் ஜல்லிக்கற்கள், மணல், எம்-சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். அண்மையில் வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தடை விதித்ததை எதிர்த்து லிபின் பொன்னுசாமி லீலா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தடை ...

சீனா தனது 140 கோடி குடிமக்களை கேமராக்கள், மொபைல் சிக்னல்கள் மற்றும் தேசிய அடையாளப் பதிவுகள் மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.இந்நிலையில், வெளிநாட்டினரையும் சீனா எவ்வாறு நுட்பமாகக் கண்காணிக்கிறது என்பதைச் சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான மார்க் ஹோஃபர் தற்செயலாகக் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளார். சீனாவின் ஜாங்ஜியாகூ நகரில் வெளிநாட்டினரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க “Dynamic Control Platform for ...

பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதை எதிர்த்தும் இந்த வழக்கில் கைதான வெள்ளத்துரை, சேதிபதி ஆகியோர் ஜாமீன் கோரியும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ...

தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் , முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.இந்த விவகாரத்துக்கு தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் காவல் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக ...

பணியின் போது போக்குவரத்து காவலர்கள் மொபைல் போனில் பேசுவதிலேயே தீவிரமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்திற்கு வரும் வழியில் இதனை நேரில் கண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தீவிரமான போக்குவரத்து நெரிசல் மற்றும் சிக்னல் நேரங்களில் கூட காவலர்கள் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காவலர்களின் இந்த கவனக்குறைவான செயல்பாடு பொதுமக்களின் ...

இந்தியாவில் காணப்படும் பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப் பூச்சிகள் குறித்து கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த விரிவான ஆய்வுகளின் முடிவில், நாட்டின் முதல் அதிகாரப்பூர்வ கலைக்களஞ்சியப் பட்டியலை இந்திய விலங்கியல் சர்வே அமைப்பு (இசட்எஸ்ஐ) தயாரித்துள்ளது. சுமார் 13,703 இனங்கள் இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை ...