கோவை ராமநாதபுரம் பகுதியில் க்யூப் ஸ்கொயர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோர் பொதுமக்களிடம் இடம் வாங்கி வீடு தருவதாக கூறி மோசடி.. இடத்தின் உரிமையாளர் கையெழுத்தை போலியாக போட்டு பல நபர்களிடம் ஒப்பந்தம் போட்டு லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி. கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நான்கு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கொண்டே கவுண்டன் பாளையம, கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ஆறுச்சாமி ( வயது 60)ஆயுள் தண்டனை கைதி’இவருக்கு நேற்று முன்தினம் சிறையில் வைத்து திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அங்கு சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் இறந்தார். இது குறித்து ஜெயிலர் சிவராஜ் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-புத்தாண்டை யொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 31 ஆம் தேதி இரவு 1500 போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேவாலயங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பெண்களை கேலிக்கிண்டல் செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கோவையில் 31-ந்தேதி இரவில் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் ...

கோவை : ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பக்கம் உள்ள பெருமாள் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் ( வயது 55) பி.ஏ. பட்டதாரி.இவர் சொந்தமாக வியாபாரம் செய்து வந்தார். கடந்த 26 ஆம் தேதி வியாபாரம் நிமித்தமாக கோவைக்கு வந்திருந்தார் .கோவை ஆர். எஸ். புரம். வெங்கட கிருஷ்ணா ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து ...

கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்படும் ஒரு மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தில் ஜூனியர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி (வயது 35) இவர் நேற்று நீதிமன்றத்தில் இருந்து அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை மஞ்சுஸ்வரி மற்றும் அவரது பெற்றோர்கள் சேர்ந்து மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசி கொலை ...

கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 36). இவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நான் பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன் . சில நாட்களுக்கு முன்பு எனது முகநூலில் இடம், வீடு விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் பார்த்தேன். ...

கோவை சின்னியம்பாளையம் இந்திர நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 49). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே காலை வேலைக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென பெருமாளை தடுத்து நிறுத்தினர். அவர்கள் பெருமாளிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் ...

கோவை: மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் நிறுவனம் கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அமைத்தது. தேஜஸ் போர் விமானத்தின் இறக்கைகள் மற்றும் இந்திய ராணுவம் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏவுகணைகள் தயாரிக்கும் பணிஆணைகளை பெற்று செயல்பட்டு வந்தது. பீரங்கி தாக்குதல்களை எதிர்க்கும் ஏவுகணை, ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின் படி, மாநகர ஆயுதப்படைப்பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு கடந்த 9-ந் தேதி வருடாந்திர படை திரட்டு கவாத்து பயிற்சி போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இந்த பயிற்சியில் போலீசாருக்கு நவீன ஆயுதங்களை கையாளுதல், கண்ணீர் புகை குண்டுகளை கையாளுதல், கலவர கூட்டத்தை கலைத்தல், அணிவகுப்பு கவாத்து, பாதுகாப்பு ...

கோவை:கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று இரவு 9 மணியளவில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சில் 38 பயணிகள் இருந்தனர். ஆம்னி பஸ்சை டிரைவர் ஷியாம் மற்றும் கூடுதல் டிரைவர் ஆனந்த் ஆகியோர் ஓட்டி வந்தனர். பஸ் நள்ளிரவு 2.45 மணியளவில் கோவை சூலூர் போலீஸ் ...