கோவை : ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பக்கம் உள்ள பெருமாள் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் ( வயது 55) பி.ஏ. பட்டதாரி.இவர் சொந்தமாக வியாபாரம் செய்து வந்தார். கடந்த 26 ஆம் தேதி வியாபாரம் நிமித்தமாக கோவைக்கு வந்திருந்தார் .கோவை ஆர். எஸ். புரம். வெங்கட கிருஷ்ணா ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார். பின்னர் அவர் தங்கி இருந்த லாட்ஜில் உள்ள பாரின் மது அருந்தினார்.பின்னர் அறைக்கு செல்வதற்காக படிக்கட்டில் நடந்து சென்றார். அப்போது குடிபோதையில தவறி விழுந்தார் .இதில் அவரது தலை ,முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து ஆர் .எஸ் .புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Leave a Reply