கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் மரணம்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கொண்டே கவுண்டன் பாளையம, கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ஆறுச்சாமி ( வயது 60)ஆயுள் தண்டனை கைதி’இவருக்கு நேற்று முன்தினம் சிறையில் வைத்து திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அங்கு சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் இறந்தார். இது குறித்து ஜெயிலர் சிவராஜ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.