வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேஷன் கங்கா பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தியா மீட்பு பணியின் போது 18 நாடுகளில் இருந்து 147 வெளிநாட்டினரையும் வெளியேற்றியது என்று அவர் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ராஜ்யசபாவில் கூறினார். உக்ரைனில் நடந்து வரும் ...

சென்னை: தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோர்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணி சென்னை அசோக்நகரில் நாளை (இன்று) தொடங்குகிறது. படிப்படியாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப் படும். இந்த வயதுக்குட்பட்ட சுமார் 21.21 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோர்பி ...

கோவை : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 58 இடங்களில் நேற்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனைக்கு பின்னர் எஸ் .பி. வேலுமணி தனது வீட்டில் அளித்த பேட்டியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

வாஷிங்டன்: நேட்டோ, ஜி-7 ஆகிய அமைப்புகளை தவிர, உலகளாவிய புதிய கூட்டணியை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளால் அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஜென் சாகி நேற்று அளித்த பேட்டி வருமாறு: ...

புதுடில்லி: ரஷ்யாவிடமிருந்து ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்வது, 47 சதவீதம் குறைந்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ‘சிப்ரி’ நிறுவனம், உலக நாடுகளின் ஆயுதக் கொள்முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில், இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் இறக்குமதி, 21 ...

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 19 நாளாக தொடர்ந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், இரு நாடுகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, ரஷ்யாவிற்கு எதிராக போரிட ஐரோப்பிய நாடுகள் ...

கோவை அருகே உள்ள பேரூரில் அருள்மிகு பட்டீஸ்வரர் கோவில் உள்ளது இக்கோவிலில் தேரோட்டம் இன்று ( செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. இதனால் பேரூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறுவாணி ரோடு-பேரூர் ரோட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காந்திபுரம் டவுன்ஹாலில் இருந்து பேரூர் வழியாக ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், மாதம்பட்டி ,செம்மேடு, ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ...

கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டிற்கு இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வந்தனர். அப்போது கேட் அருகே இருந்த காவலாளியிடம் கேட்டை இருக்க கூறினார். அதற்கு காவலாளி அனுமதி கேட்டு வருவதாக கூறியதாக தெரிகிறது. கேட் திறக்கப்படாததால் 2 அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே ...

கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள பட்டணம் ,ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 27) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று (திங்கள்) வெள்ளிங்கிரி கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது.கோவிலில் திருமணம் பதிவு செய்வதற்கான சான்றிதழ்களை கொடுத்து விட்டு வருவதாக இருசக்கர வாகனத்தில் பாலகிருஷ்ணன் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கமுள்ள பெரியபோது கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி இவரது மகள் சுகந்தி ( வயது 18 ) இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலையில் கல்லூரிக்குசென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரிஆனைமலை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் ...