கோவையில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற மாநகராட்சி அதிகாரியிடம் தகராறு – போலீசில் புகார்..!

கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனராக பணிபுரிந்து வருபவர் எம். எம். கனகராஜ் ( வயது 52)இவர் நேற்று வட கோவை பவர் ஹவுஸ் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் இவரிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து உதவி என்ஜினியர் கனகராஜ் காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா, குரு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..