கோவையில் குற்றங்களை தடுக்க இரவு ரோந்து தீவிரம் .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவு

கோவையில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் முக்கிய சந்திப்பு பகுதிகளில், குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் என மாநகர பகுதிகளில் இரவு நேர போலீஸ் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது .இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் ‘கார்களில் வருவோரிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வாகனத்துக்கான ஆவணங்களை காட்டிய பிறகுதான் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- சோதனையில் ஈடுபடும் போலீசார் காவலன் செயலியில் தாங்கள் எந்த பகுதியில் தணிக்கை செய்து வருகிறார்கள்? என்று பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வாகன தணிக்கை முறையாக நடக்கிறதா? என்பதை கண்காணிக்கவும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. என்றார்.