கோவை சினிமா தியேட்டரில் கோஷ்டி மோதல் – 15 பேர் மீது வழக்கு ..!

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வடகோவையில் தனியாருக்கு சொந்தமான சினிமா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரை விற்பனை செய்வது தொடர்பாக தியேட்டர் உரிமையாளருக்கும், குத்தகைதாரருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தியேட்டர் வளாகத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த ஆர் எஸ் .புரம். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இது தொடர்பாக ஒரு கோஷ்டியை சேர்ந்த காஸ்மோஸ் சிவகுமார். சுப்பிரமணி, வாசன், சரவணன், சஞ்சய், வசந்தகுமார், உதயகுமார், ஜாபர் ஸ்டீபன் ஆகிய 10 பேர் மீதும் மற்றொரு கோஷ்டியை சேர்ந்த சுகுணா செந்தில், பசும்பொன் குமார், பப்பாளி ரமேஷ் .கோபால், சுதா ஆதிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கோஷ்டி மோதல் எதிரொலியாக தான் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ரவுடி சத்திய பாண்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்..