சொத்து தகராறில் தம்பியை சரமாரி வெட்டி படுகொலை செய்த அண்ணன்..

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கொண்டரசம்பாளையம் ஓட்டையன்காடு தோட்டத்தில் வசித்து வருபவர் விவசாயி ஈஸ்வரமூர்த்தி வயது (63 ) இவரது மனைவி முத்துலட்சுமி வயது (45 ) இவர்களுக்கு இளங்ளங்கவி வயது(12 ) என்ற மகனும் வாணிஸ்ரீ வயது( 9 )என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை ஈஸ்வரமூர்த்தி தனது தோட்டத்திலிருந்து கறவை மாட்டில் பால் கறந்து பால் ஆளரிடம் விற்பனை செய்வதற்காக தனது டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் பைக்கில் காலை 5 மணி அளவில் தோட்டத்திலிருந்து வந்து கொண்டிருந்தார் .

தனது மனநிலை பாதிக்கப்பட்ட சொந்த அண்ணனான பழனிச்சாமி வயது( 65 ) பின்னாலிருந்து பலத்த கம்பீராடால் தாக்கி அவர் மறைத்து வைத்திருந்த அறிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது .இதில் வெட்டு காயங்களுடன் கீழே விழுந்த ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தாராபுரம் போலீசார் தெரிவித்ததாவது;- அண்ணன் பழனிச்சாமிக்கும் தம்பி ஈஸ்வரமூர்த்திக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. அண்ணன் பழனிச்சாமி மனநிலை பாதிக்கப்பட்டவர் . இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட சொத்து தகராறு  காரணமாக அண்ணன் தம்பியை வெட்டிக் கொண்டதாக தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தாராபுரம் டிஎஸ்பி கலையரசன் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் தம்பியை கொலை செய்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.