ஆட்டோ கவிழ்ந்து பயணி பரிதாப பலி..!

கோவை: மேட்டுப்பாளையம் ஜல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 50 ) கூலிதொழிலாளி. நேற்று இவர் ஒரு ஆட்டோவில் மேட்டுப்பாளையம் -ஊட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த ஆட்டோ திடீரென்று நிலைத்தடுமாறி  ரோட்டில் கவிழ்ந்தது.இதில் ஆட்டோவில் பயணம் செய்த ராமசாமி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது மகன் பிரசாந்த் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் ஆட்டோ டிரைவர் அல்போன்ஸ்ராஜ் (வயது 45) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.