கோவையில் நின்ற லாரி மீது பைக் மோதி விபத்து : கணவர் பலி- மனைவி படுகாயம்..

கோவை அருகே உள்ள திருமலையாம்பாளையம் ,பகவதி நகரை சேர்ந்தவர் சேது ராஜன் (வயது 37) இவரது மனைவி ராதா மணி(வயது 32) இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் சேலம்- கொச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். செட்டிபாளையம் பைபாஸ் ரோடு அருகே சென்ற போது எந்த வித சிக்னலும் இல்லாமல் ரோட்டில் நிறுத்தி இருந்த ஒரு லாரியின் பின்புறம் இவர்கள் சென்ற பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் சேதுராஜன் இறந்துவிட்டார். மனைவி ராதாமணி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் ராசி பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் தினேஷ் (வயது 24 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.