ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை இராமநாதபுரம் ஒலம்பஸ் பாரதி நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் முருகன் .இவரது மகன் அருள் பாண்டியன் ( வயது 18) தருமபுரியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் கோவைக்கு வந்தார். நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தந்தை முருகன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.