கோவையில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பரிதாப பலி..

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் ( வயது 48) இவர் நேற்று ஆவாரம்பாளையம் இளங்கோ நகரைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 28) என்பவரது பைக்கில் பின்னால் அமர்ந்து கோவை அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவர்கள் சென்ற பைக்கும் அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் நேர் மோதிக்கொண்டன. இதில் பைக்கில் பின்னால் இருந்த சங்கர் கணேஷ் படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பைக் ஒட்டி வந்த மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.